குரு
ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு இவ்வாறு மகாபாரதம் நடத்திக்கொண்டிருந்தார்.

கம்சனுக்கு அசரீரி எச்சரித்தது, அவன் தங்கைக்கு பிறக்கபோகும் 9 வது குழந்தையின் மூலம் அவனுக்கு மரணம் ஏற்படும். இதை கேட்ட கம்சன் ஆத்திரம் அடைந்து அவன் தங்கையையும் வசுதேவரையும் சிறையில் அடைத்தான்.

சிறையில் அவர்களுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. அவைகளை கம்சன் கொன்று விட்டான். 8 வது குழந்தையையும் கொல்லும்போது அக்குழந்தை காளியாக மாறியது.

பிறகு 9 வது குழந்தையாக கண்ணன் பிறந்தான். அவனையும் கொன்று.......

இவ்வாறு ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்கும் போது,

Student: "சார், எனக்கு ஒரு சந்தேகம்"......

Teacher: "உலகமே போற்றும் மகாபாரதத்தில் சந்தேகமா? கேள்."

Student: "கம்சனுக்கு 9 வது குழந்தையின் மூலம் மரணம் என்றுதான் தெரியுமே, பிறகு ஏன் வசுதேவரையும் தேவகியையும் ஒரே சி(அ)றையில் அடைத்தான்? "

Teacher: !?!??!!?!!?!?!?!?!!!!!!????
6 Responses
  1. //Student: "கம்சனுக்கு 9 வது குழந்தையின் மூலம் மரணம் என்றுதான் தெரியுமே, பிறகு ஏன் வசுதேவரையும் தேவகியையும் ஒரே சி(அ)றையில் அடைத்தான்? "//

    100 ஆண்டுகளுக்கு முன்பு கூட குழந்தை என்பது வரம் என்கிற நம்பிக்கையும், பகவான் கொடுக்கும் வரமாகவே நினைக்கப்பட்டது, கர்ணனின் பிறப்பு கூட குந்திக்கு சூரியன் அருளிய வரன் என்று தான் சொல்லுவார்கள்


  2. குரு Says:

    வருகைக்கு நன்றி திரு.கோவி கண்ணன்


  3. அடடா!... உக்காந்து யோசிபீங்களோ??


  4. குரு Says:

    வருகைக்கு நன்றி திரு.குரும்பையூர் மூர்த்தி.

    தலைகீழ நின்னுட்டு யோசிச்சாலும் இந்த Question correct ன்னு தோணுதே??!!


  5. குரு அவர்களே, நீங்கள் கேட்ட இதே கேள்விக்கு நான் பதிலளித்து போட்ட பதிவைப் பார்க்கவும், http://dondu.blogspot.com/2006/02/blog-post_09.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்


  6. குரு Says:

    நன்றி டோண்டு ராகவன் சார்.

    2006 ல் தான் பொட்டி தட்டும் வேலைக்கே சேர்ந்தேன். நீங்க அப்போவே இத பத்தி பேசிட்டீங்க... (ஒரு பதிவு போச்சே!!)